இன்றைய தினம் (13.12.2024) எமது பிரதேச செயலகத்தில் பிரதேச தொழில் முயற்சி மன்ற கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடல் பிரதேச செயலக கணக்காளர் திரு.க.சுதர்சன் அவர்கள் தலைமையில் இடம் பெற்றது. கணக்காளர் வியாபாரப் பெயர் பதிவு தொடர்பாக விளக்கமளித்தார்.
இந் நிகழ்வில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள்,பொது சுகாதார உத்தியோகத்தர், வங்கி உத்தியோகத்தர்கள் (இலங்கை வங்கி,கொமர்ஷியல் வங்கி,DFCC வங்கி),சுற்றுச்சூழல் அதிகாரி,சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் ஆகியோர் கலந்து தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வியாபார அனுமதி,தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வசதிகள் தொடர்பான கருத்துக்களை வழங்கினர்.













