78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கரவெட்டி பிரதேச செயலகத்தில் 04.02.2026 அன்று காலை 8.04 மணிக்கு சுகந்திர தின நிகழ்வு சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய எமது பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில் பயன்தரும் மரக்கன்று பிரதேச செயலாளர் அவர்களால் நாட்டப்பட்டது.அதனைத் தொடர்ந்து, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரின் பங்கேற்புடன் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிகழ்வு தேசிய உணர்வோடு சிறப்பாக நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.













