சமுர்த்தி பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (19.02.2026) இன்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர், தலைமையக சமுர்த்தி முகாமையாளர், முகாமைத்துவ பணிப்பாளர், மாவட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் அனைத்து சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு,நிதி மேலாண்மை: பிரிவு ரீதியான குழுச் சேமிப்பு, கடன் அறவீடு மற்றும் சேமிப்புத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த மீளாய்வு,வாழ்வாதார மேம்பாடு: புதிய தொழில் முயற்சியாளர்களை இனங்காணல் மற்றும் அவர்களுக்குத் தேவையான தொழில் பயிற்சிகளை வழங்குதல்,சமூக வலுவூட்டல்: மாதிரி கிராமங்களை அமைத்தல் மற்றும் பயனாளிகளின் பொருளாதாரத் திறனை மேம்படுத்தும் திட்டங்கள் போன்ற விடயங்கள் கலந்து உரையாடப்பட்டதுடன் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, ஒரு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது













