சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு மூத்த பிரஜைகள் சங்கங்கள், பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் என்பவற்றிற்கிடையில் யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டியில் இமையாணன் மேற்கு சிரேஷ்ட பிரஜைகள் சங்கம் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டமைக்காக 04.10.2025 அன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கயிலாசபிள்ளை சிவகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலகத்தில் "உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்" என்னும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட சிறுவர் முதியோர் தின நிகழ்வில் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் எமது பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.













