டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான இழப்பீட்டு காசோலை வழங்கும் நிகழ்வு 14.03.2026 அன்று கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கரவெட்டி பிரதேச செயலாளர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்கள் பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கு இழப்பீட்டு காசோலைகளை வழங்கி வைத்தார்.டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களினால் பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இழப்பீட்டு நிதி வழங்கப்பட்டது.














