போதை ஒழிப்பு தொடர்பான “போதை” எனும் விழிப்புணர்வு நாடகமொன்று எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கடந்த 2019.06.23 ஆந் திகதி உடுப்பிட்டி சந்தி, பைங்கூரன் ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்டது. இதன் பதிவுகள் சில ..............
![]() |
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
|
|
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
கரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் வதியும் பிறப்பு பதிவற்ற சிறுவர்களுக்கான விசேட நடமாடும் சேவையொன்று 2019.05.14 ஆந் திகதி கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது பிறப்புப் பதிவற்ற சிறார்களுக்கான 17 காலம் கடந்த பிறப்புப் பதிவுகளும் ஒரு உத்தேச வயது சான்றிதழும் இரண்டு திருமணப் பதிவுகளும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.




கரவெட்டி பிரதேச செயலாளர் திரு.ஈஸ்வரானந்தன் தயாரூபன் அவர்களின் தலைமையில், யாழ் மாவட்ட கருத்திட்ட ஒருங்கிணைப்பாளரும் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 2019.05.28 ஆந் திகதி கிராம சக்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கிராம சக்தியின் தலைவர் மற்றும் செயலாளர் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்கள் முன்னாள் விவசாய பிரதி அமைச்சராக செயற்பட்ட காலபகுதி ஒதுக்கீட்டு நிதியிலிருந்து 11 விவசாய பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில் நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
![]() |
![]() |
|
![]() |
![]() |




























