உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தினை ஒட்டி கரவெட்டி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளரின் தலைமையில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரியினால் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு இன்று(10.10.2025) கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான காரணங்களும், அதனை கண்டறியும் விதமும்,அதற்கான மருத்துவ ஆலோசனைகளும் சுகாதார வைத்திய அதிகாரியினால் வழங்கப்பட்டது.
இதில் கரவெட்டி பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.














