எமது பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (14. 11. 2025) பிரதேச காணி பயன்பாட்டு திட்டமிடல் கூட்டம் கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கூட்டமானது எமது பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி.உமாமகள் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் இத்துறை சார்ந்த திணைக்கள அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.இதில் வன,வனஜீவராசிகள் திணைக்களத்தினால் விடுவிக்க வேண்டிய காணிகள் மற்றும் கிராம மட்ட காணி பயன்பாட்டு திட்டம் என்பன பற்றியும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













