சர்வதேச சிறுவர் முதியோர் தினமானது வெள்ளிக்கிழமை (7.11. 2025 )அன்று கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் எமது பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி. உமாமகள் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. சிவலிங்கம் சத்தியசீலன் (ஓய்வு நிலை மேலதிக பணிப்பாளர் நாயகம், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. இராசலிங்கம் சத்தியலிங்கம் ( ஓய்வு நிலை சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் முதியோர்களுக்கு அன்பளிப்புகளும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டதோடு திருமதி. செந்தூரன் பாமினி (உளவளத்துறை அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களினால் "மகிழ்ச்சியான இளமையும், முதுமையும்" எனும் தலைப்பில் சிறப்பான விழிப்புணர்வு உரை ஆற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான கள உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வானது நேற்றைய தினம் (06/11/2025) பிரதேச செயலாளர் தலைமையில் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், உதவித்திட்டப் பணிப்பாளர்,நிர்வாக உத்தியோகத்தர் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் மற்றும் கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

"பிளாஸ்ரிக் பாவனையை முடிவுறுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் சுற்றாடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 24.10.2025 அன்று யா/கரணவாய் மகா வித்தியாலயத்திலும் 23.10.2024 அன்று யா/ வதிரி திரு. இருதய கல்லூரியிலும் உள்ள மாணவர்களுக்கு பிளாஸ்ரிக் பாவனை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் சுற்றுச்சூழல் உத்தியோகத்தர் திரு.நி. ஜெசிக்கா (மத்திய சுற்றாடல் அதிகார சபை- யாழ்ப்பாணம் )அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பிளாஸ்ரிக் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய தெளிவான விளக்கத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நமது நாடு தற்போது எதிர்கொள்ளும் ஆபத்தான சூழ்நிலைக்கான முதன்மை காரணிகளாக போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப் பொருள் கடத்தலை சுட்டிக்காட்டலாம்.இந்த போதைப் பொருள் அச்சுறுத்தலின் ஆழத்தையும் பரவலையும் கருத்தில் கொண்டு இதனை ஒழிப்பதற்காக இன்றைய தினம் நச்சுப் போதைப்பொருள் ஒழிப்புக்காக முழு நாடும் கைகோர்க்கும் தேசிய செயற்திட்டத்தினை கௌரவ ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் நிகழ் நிலையினூடாக கலந்து கொண்டதுடன் உறுதியுரையினையும் எடுத்துக் கொண்டனர்.

சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகள் மற்றும் வங்கி சங்கங்களை தரப்படுத்தலில் கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கரவெட்டி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி அகில இலங்கை ரீதியில் நான்காம் இடத்தினை பெற்றுக் கொண்டது.
இவ் வங்கியின் வளர்ச்சிக்கு சேவையாற்றிய முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எமது பிரதேச செயலகம் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குடியுரிமை சாசனம்

Scroll To Top