வடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகமும் பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்திய 2025 ஆம் ஆண்டுக்கான பிரதேச பண்பாட்டு விழா 2025.09.12 ஆம் திகதி நெல்லியடி மத்திய கல்லூரி கலையரங்கத்தில் பிரதேச செயலாளர் திருமதி.உமாமகள் மணிவண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்திராகவும், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், யாழ் மாவட்டச் செயலக சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் சுகுணலினி விஜயரத்தினம் மூத்த கலைஞர் கந்தன் பாலன் மற்றும் மூத்த கலைஞர் சிவகுரு பேரின்பநாயகி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்ததுடன் பிரதேச கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகமும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்தும் பிரதேச பண்பாட்டு விழா 2025.கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் அனைவரையும் விழாவில் பங்கு பற்றி சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள "Clean Srilanka" தேசியதிட்டத்துடன் இணைந்த வகையில் செயற்படுத்தப்பட்டுள்ள செயிரி வாரத்திற்கு அமைவாக எமது பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்பட்ட அலுவலக ஒழுங்குபடுத்தல் செயற்றிட்டத்தின் சில பதிவுகள்...














