முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 18.07.2025 ஆம் திகதியன்று கரவெட்டி பிரதேச செயலாளர் தலைமையில் கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் வளவாளர்களாக R.அமலன் (மாவட்ட முன்பிள்ளைபருவ இணைப்பாளர்) ,K.சத்தியசீலன் (முன்பள்ளி வலயக்கல்வி பணிப்பாளர்). R.றொபின்சன் (பயிற்சியாளர் CCH நிறுவனம்) ஆகியவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மாதகலில் வந்துதித்த - மாதரசி
கரவையம்பதியில் கண்ணாளனைக் கரம்பிடித்து,
ஆறு குழந்தைகளுடன் அன்பான வாழ்வமைத்து,
நூறு வயதுவரை வாழ்ந்திட்ட திருமதி செல்லக்கண்டு
சித்திரை முப்பதில் இப்புவியில் வந்துதித்து
முத்திரை பதித்திட்ட வீரப் பெண்மணி.
கரிசனையான மனைவியாய், கண்ணான அன்னையாய்
கரணவாயில் வாழ்ந்துவரும் கண்மணி
கனிவான தாயே நீர்,மென்மேலும் வாழ்ந்திடவே,
கரவெட்டி பிரதேச செயலகமும் களிப்புடனே வாழ்த்துகின்றது.
நோய் நொடிகளின்றி நீண்டகாலம் வாழ்ந்திடவே,
நாங்கள் எல்லாம் வாழ்த்துகின்றோம்.
வாழிய வாழிய பல்லாண்டு.
100years1
 
100years2
 
வாழ்த்துவோர்
பிரதேச செயலாளர்,
அனைத்து உத்தியோகத்தர்கள்
பிரதேச செயலகம்,
கரவெட்டி .
"வலுவூட்டலால் நாட்டை வெல்லுங்கள் - போதையிலிருந்து மீண்டெழுங்கள்" - 2025 தொனிப் பொருளுக்கமைய, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு சமுர்த்தி கொடி தின நிதி சேகரிப்பு வேலைத்திட்டத்தில் கூடிய நிதியினை சேகரித்த கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு சமுர்த்திப் பணிப்பாளர் திரு எவ்.சி. சத்தியசோதி தலைமையில் 05.06.2025 மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் எமது பிரதேச செயலக கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

இன்று (03.06.2025) சர்வதேச சுற்றாடல் வாரம் மற்றும் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்ரிக் கழிவு முகாமைத்துவம், நீர் மாசடைதல் மற்றும் வளி மாசடைதல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


 3EnDay1 3EnDay2

Scroll To Top